புதிய ஆன்லைன் படிப்புகள் – ஐஐடி!

சென்னை ஐஐடியின் டிஜிட்டல் திறன்கள் மையம் சார்பில் மாணவர்கள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் புரொபெஷனல் பணியாளர்களுக்காக அட்வான்ஸ்ட் புரோகிராமிங் ஆன்லைன் படிப்பு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி-ஜியூவிஐ என்ற நிறுவனம் இணைந்து இந்த ஆன்லைன் படிப்பினை வழங்குகிறது.

ஐடி தொழில்துறையில் விருப்பமுள்ளவர்கள், குறிப்பாக அனுபவமிக்க புரோகிராமிங் திறன்கள் கொண்ட பொறியியல் இறுதியாண்டு மாணவர்களிடமிருந்து இந்த ஆன்லைன் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

120 மணி நேரம் கொண்ட இந்த ஆன்லைன் படிப்பு, மூன்று மாதத்தில் பணிப்புரிந்து கிடைக்கும் அனுபவத்தை மாணவர்கள் எளிதில் பெறும் வகையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.