மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி டி.கல்லுப்பட்டி பேருந்து நிலையம் அருகே அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஆர். பி.உதயகுமாரை ஆதரித்து நடிகை விந்தியா பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசினார்.
அவர் பேசுகையில், “பொதுவா ஜல்லிக்கட்டு என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏனென்றால் திமுக மாதிரி பூம்பூம்மாடு கிடையாது. அங்கே வருவது எல்லாம் கொம்பு வைத்த சிங்கம் அதை அடக்குவது தனி அழகுதான். ஜல்லிக்கட்டு பார்ப்பதற்காக டி.வி போட்டேன் பார்த்தவுடன் மனது கஷ்டமாக இருந்தது ஜல்லிக்கட்டு பார்க்க 2 பேர் வந்திருந்தனர் விவரம் கெட்ட ராகுல்காந்தியும் விவஸ்த கெட்ட உதயநிதி ஸ்டாலின் வேடிக்கை பார்க்க வந்தனர்.
இதில் ஒருத்தருக்கு பிரதமர் கனவு, இன்னொருத்தருக்கு முதல்வர் கனவு அதற்கு இரண்டு பேரும் சரிப்பட்டு வரமாட்டார்கள் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் ஜல்லிக்கட்டுக்கு தடை கொண்டு வந்துவிட்டு இப்பொழுது ஜல்லிக்கட்டு பார்க்க வந்துள்ளனர். மக்கள் போராட்டத்தை மதித்து அப்போது முதல்வராக இருந்த ஓபிஎஸ் பிரதமரிடம் பேசி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வாங்கிக் கொடுத்தவர்.