அட நம்ம சினேகா வா !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சினேகா.பார்ப்பதற்கு பக்கத்துக்கு வீட்டு பெண் போன்று தோன்றுவர்.தமிழ் சினிமாவில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் வெற்றி பெற்றார்.

தமிழ்,தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளில் படங்களை நடித்துள்ளார்.இவரது கணவர் பிரசன்னா.இருவரும் தற்போது அதிக விளம்பர படங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில்,நடிகை சினேகா ரூ.25 லட்சம் பணத்தை ஏமாற்றி மோசடி செய்துவிட்டதாக ஏற்றுமதி நிறுவனம் மீது புகார்அளித்துள்ளார்.

தனியார் சிமெண்ட் ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ.25லட்சம் முதலீடு செய்துள்ளார்.அவர்கள் மாதம் அதிக வட்டி தருவதாக கூறியுள்ளனர்.ஆனால் ஒப்பந்தத்தில் கூறியபடி, சம்பந்தப்பட்ட ஏற்றுமதி நிறுவனம் பணத்தை தரவில்லை என்று சினேகா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மழை காரணமாக 26 மாவட்டங்களில் விடுமுறை !