அவ்வப்போது சர்ச்சைகளைக் கிளப்பி வரும் நடிகை மீராமிதுன் தற்போது தமிழ் திரையுலகின் இயக்குனர்களை சாதிய ரீதியாக திட்டி பேசி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சில பிரபல இயக்குநர்கள், தனது படத்தை மார்பிங் செய்து படங்களில் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகளை அவிழ்த்து விட்டுள்ளார்.அதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை குறிப்பிட்டு பேசும் நடிகை மீராமிதுன், அந்த சமூகத்தை சார்ந்த இயக்குநர்கள் அனைவரும் கிரிமினல்கள் என்றும் காட்டமாகப் பேசியுள்ளார்.
தொடர்ந்து சமூகத்தின் பெயரை குறித்தே பேசியவர் அந்த சமூகத்தை சார்ந்த அனைத்து திரைப்பட இயக்குநர்களும் திரை துறையை விட்டு நீக்கப்பட வேண்டியவர்கள் என்றும் சாடியுள்ளார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது