பிரபல நடிகையின் திருமணம் திடீர் ரத்து

பட்டாஸ், நோட்டா, நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை மெஹ்ரீன் பிர்சாதாவும்,, ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பஜன்லாலின் பேரன் பாவ்யா பிஷ்னோய்யும் காதலித்து வந்தனர். அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து விரைவில் திருமணமும் நடைபெற இருந்தது.

இந்நிலையில் இந்த திருமணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என திடீர் என்று அறிவித்துள்ளார் நடிகை மெஹ்ரீன் பிர்சாதா. இந்த முடிவை இருவரும் இணைந்து எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காதலித்து நிச்சயத்தார்த்த செய்து கொண்ட இவர்களுக்கு நிச்சயதார்த்தத்திற்கு மேல் திருமணம் வரைக்கும் இந்த உறவு செல்லாது. திருமணத்திற்குப் பிறகும் இந்த உறவு நீடிக்காது என்று தெரியவந்திருக்கிறது. அதனால், திருமணத்தை ரத்து செய்ததாகவும் அவர் அறிவித்துள்ளார்.

பாவ்யாவும் நானும் எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் புரிதலோடு நட்பு உணர்வோடு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் மெஹ்ரீன் அறிவித்துள்ளார். மேலும், பாவ்யாவுடனும் அவரது குடும்பத்தினருடனும் அவரது நண்பர்களுடன் இனி எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டேன் என்றும் அவர் உறுதி கூறியிருக்கிறார்.

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷனுடன்2017ல் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், விஜய் தேவரகொண்டா உடன் நோட்டா, தனுஷின் பட்டா படங்களில் நடித்துள்ளவர் தற்போது f3 என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இனி திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்