நடிகர் விவேக் இறப்பிற்கு தடுப்பூசி காரணமில்லை !

கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் காலமானார்.மேலும் அவர் இறப்பதற்கு ஒரு நாள் முன்பு அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அவர் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மறு நாள் அவர் இறந்தது பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி தான் காரணம் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

நடிகர் விவேக் மரணம் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில், தேசிய தடுப்பூசி ஆய்வுக்குழு வல்லுநர்கள் நடிகர் விவேக் மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தமில்லை என்று அறிவித்துள்ளது.