மூச்சுத்திணறல் காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி !

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மூச்சுத்திணறல் காரணமாக சென்னயைில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு கரோனா தொற்று ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினார்.

இந்நிலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறல் காரணமாக விஜயகாந்த் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.