நடிகர் வெங்கட் சுபா கரோனாவால் காலமானார் !

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.வரும் 31 ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கரோனா தொற்றின் இரண்டாம் அலையில் பிரபலங்கள்,அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் என பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

நடிகர் பாண்டு,குட்டி ரமேஷ்,தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர் ,நிதிஷ் வீரா இவர்களை தொடர்ந்து நடிகர் வெங்கட் சுபா கரோனாவால் காலமானார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் டி.சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.என் நண்பன், சிந்தனையாளன், எழுத்தாளன், படைப்பாளி, நடிகன் வெங்கட் மணிக்கு இறைவனடி சேர்ந்தார் என்று டி.சிவா வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.