12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடைபெறும்

பிளஸ் 2 பொதுத் தேர்வு நிச்சயம் நடைபெறும். வகுப்பறைக்கு வந்தே மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

திருச்சி மரக்கடை அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் ஆசிரியர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘பிளஸ் 2 பொதுத் தேர்வு நிச்சயம் நடைபெறும்.

வகுப்பறைக்கு வந்தே மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள். ஆன்லைனில் தேர்வு நடத்தப்படாது. தேர்வு தேதியை மாநில அரசே முடிவு செய்யும். சுகாதாரத்துறை அறிவிப்பின்படியே தேர்வு தேதி இறுதி செய்யப்படும்.