நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பதிப்பில் இருந்து தமிழகம் முழுதாக மீளவில்லை அதற்குள் மூன்றாம் அலை வரும் என்று அறியப்பட்டநிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிகமானோர் முன்வருகின்றனர்.

தமிழக அரசு மற்றும் பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். நடிகர்கள், நடிகைகள் பலரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு அவை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று நடிகர் சூர்யாவும், அவரது மனைவியும் நடிகையுமான ஜோதிகாவும் வடபழனியிலுள்ள சூர்யா மருத்துவமனையில் இன்று தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர்.தடுப்பூசி செலுத்துக் கொண்டது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா.