நடிகர் சூர்யா புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது !

இயக்குனர் பாண்டியராஜ் மற்றும் சூர்யா நடிப்பில் உருவாக உள்ள சூர்யா 40 படத்திற்கான ஷூட்டிங் இன்று பூஜையுடன் ஆரம்பமானது. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 7ம் தேதி அன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு மீண்டு வருவதாக நடிகர் சூர்யா பதிவிட்டார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று பிப்ரவரி 11ம் தேதி சூர்யா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.சூர்யா இந்த பூஜையில் கலந்து கொள்ள வில்லை.அவர் ஓய்வில் இருப்பதால் முதற்கட்டமாக அவர் இல்லாத காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.