நான் தேர்தலில் போட்டியிடவில்லை – மன்சூர் அலிகான் !

தமிழ் தேச புலிகள் கட்சியைத் தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான். இந்நிலையில், கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட முடிவு செய்து அத்தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து கடந்த இரண்டு நாட்களாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

தற்போது தொண்டாமுத்தூர் தொகுதியில் நான் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியது,நான் இந்த தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

இப்போது வரை எனக்கு மனது கஷ்டமாக இருக்கிறது. ஏதாவது ஒரு இடத்தில் போட்டியிட வேண்டும் என முடிவெடுத்து கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குச் சென்றேன். வேட்புமனு தாக்கல் செய்து அதுவும் இறுதி செய்யப்பட்டுவிட்டது.

தொகுதியில் எங்கே போனாலும் எவ்வளவு பணம் வாங்கியிருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். என் காசை செலவழித்துதான் பிரசாரம் செய்தேன்.காவல்துறையினர் எந்த அனுமதி வாங்கச் சென்றாலும் அதிமுகவினரிடம் வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறார்கள். எனக்கு ஒன்னுமே புரியவில்லை என்று கூறினார்.