டெல்லி போராட்டத்தில் வன்முறையை தூண்டியதாக நடிகர் தீப் சித்து கைது !

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள் டெல்லியில் குடியரசு தினமன்று டிராக்டர் பேரணி நடத்தினார்கள்.அப்போது விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி திட்டமிட்ட வழியில் செல்லாமல் செங்கோட்டை பக்கம் திரும்பியது.

மேலும் தடையை மீறி நடந்த போராட்டத்தில் இருந்த விவசாயிகளை காவல்துறையினர் தடியடி நடத்தியதால் வன்முறை வெடித்தது.அப்போது நடிகரும் சமூகஆர்வலருமான தீப் சித்து தலைமையில் ஒரு பிரிவினர் செங்கோட்டையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அங்கே நமது தேசிய கொடிக்கு பதிலாக சீக்கிய கொடி ஏற்றப்பட்டது.

இந்த போராட்டத்தில் நடிகர் தீப் சித்து வன்முறையை தூண்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பெற்றார்.இந்நிலையில் டெல்லி போலீஸ் தீப் சித்துவை கைது செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.