கரோனா நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கிய நடிகர் அஜித் !

தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. undefined இதனை தடுக்க அரசு கட்டுப்படடுகளை அறிவித்துள்ளது. மேலும் மே 24 வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக நடிகர் அஜித் குமார் ரூபாய் 25 லட்சம் அளித்துள்ளார்.ஏற்கனவே நடிகர் சிவக்குமார் அவரது மகன்களும் நடிகர்களுமான சூர்யா, கார்த்தி ஆகியோர் நேரில் சென்று முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நிவாரண தொகையாக ரூபாய் ஒரு கோடி அளித்தனர்.