7th pay commission: அரசு ஊழியர்களுக்கு பெரிய பரிசு அறிவிப்பு..!

7th pay commission
அரசு ஊழியர்களுக்கு பெரிய பரிசு அறிவிப்பு

7th pay commission: அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3% உயர்த்தியுள்ளது.

இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஆண்டில் மாநில அரசு ஊழியர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படியை (DA) முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். சோலன் நகரில் நடைபெற்ற இமாச்சல பிரதேச மாநில நிறுவன தின விழாவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இமாச்சல பிரதேச மாநில நிறுவன தின விழாவில், முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் பேசுகையில், “சமீபத்தில், 2.25 லட்சம் ஊழியர்களுக்கு 6000 கோடி ரூபாய் பலன்களை வழங்குவதற்காக, மாநில அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதிய (7th Pay Commission) விகிதங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் சில பிரிவுகளின் புதிய ஊதிய விகிதத்தில் சில முரண்பாடுகள் இருப்பதாக உணரப்பட்டது. ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட இரண்டு விருப்பங்களுடன் கூடுதலாக மூன்றாவது விருப்பம் வழங்கப்படும். 2.25 மற்றும் 2.59 இன் மடங்குகளுக்கு கூடுதலாக ஊழியர்களுக்கு மூன்றாவது விருப்பத்தை முதல்வர் அறிவித்துள்ளார். மூன்றாவது விருப்பம் 15% நேரடி உயர்வு.

அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு

பஞ்சாப் அரசின் புதிய ஊதிய விகிதங்களின்படி மாநில அரசின் ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று ஜெய்ராம் தாக்கூர் அறிவித்தார். இதன் மூலம், 1.75 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு, 2,000 கோடி ரூபாய் நிதி பலன்கள் வழங்கப்படும். ஊழியர்களுக்கு மூன்று சதவீதம் கூடுதல் அகவிலைப்படி (Dearness Allowance) வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். அதாவது, இனி மாநில ஐஏஎஸ் அதிகாரிகளின் வழியில், ஊழியர்களுக்கும் 31 சதவீத டிஏ வழங்கப்படும்.

ஆண்டு வருமான வரம்பும் அதிகரித்துள்ளது

அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு, தற்போது ஊழியர்களின் அகவிலைப்படி 28 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனுடன், பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் ஓய்வூதியம் பெற ஆண்டு வருமான வரம்பு ரூ.35000லிருந்து ரூ.50000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் ஜெய்ராம் கூறுகையில், ‘2015ம் ஆண்டுக்கு பின் நியமிக்கப்படும் போலீஸ் கான்ஸ்டபிள்கள், மற்ற வகை ஊழியர்களுக்கு இணையான அதிக ஊதியம் பெற தகுதியுடையவர்கள். உயர் ஊதிய விகிதத்திற்கு தகுதியான அனைத்து காவலர்களுக்கும் அதன் பலன் உடனடியாக அமலுக்கு வரும். 2015ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் 2020ஆம் ஆண்டு முதல் அதிக ஊதியம் பெறத் தகுதி பெறுவார்கள். அதே சமயம், ஒப்பந்தத் தொழிலாளர்களை முறைப்படுத்துவதற்கான காலம் இரண்டு ஆண்டுகளாகும். பணியமர்த்தப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் பணியாளர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்கும். கான்ஸ்டபிள்களுக்கும் இதே விதி பொருந்தும்.

மத்திய அரசும் அதிகரிக்கலாம்

மறுபுறம், மத்திய அரசும் மத்திய ஊழியர்களின் அகவையை மீண்டும் ஒருமுறை உயர்த்தலாம். AICPI குறியீட்டின் தரவுகளைப் பார்த்தால், செப்டம்பர் 2021 வரை, அகவிலைப்படி (Dearness allowance) 33 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது இதன்படி அதில் 2 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களின் புள்ளிவிவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இது மேலும் 1 சதவீதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 2021க்குள் CPI (IW) எண்ணிக்கை 125 ஆக இருந்தால், அகவிலைப்படியில் 3 சதவீதம் அதிகரிப்பு உறுதி. அதாவது மொத்த DA 3% முதல் 34% வரை அதிகரிக்கும். இது ஜனவரி 2022 முதல் வழங்கப்படும் அதன்படி மத்திய ஊழியர்களின் சம்பளம் உயரும்.

இதையும் படிங்க: நான்கு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு