சூப்பர்..அரசு ஊழியர்களுக்கு மூன்று போனஸ் !

இந்த மாதம் முதல் பண்டிகை காலம் தொடங்கவுள்ளது.மேலும் தீபாவளி பண்டிகையை கொண்டாட அனைவரும் தயாராக உள்ளார்கள்.

இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு தித்திப்பான செய்தி வெளியாகியுள்ளது. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 28 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுவரை அகவிலைப்படி 17% மும், வீட்டு வாடகை படி 24% மும் வழங்கப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மேலும் வீட்டு வாடகைப் படி 24 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு ஆணை வெளியிட்டது.

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட அகவிலைப்படி 28% இருந்து 3% உயர்த்தி 31% ஆக வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அது மட்டுமின்றி நிலுவையில் உள்ள ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான அகவிலைப்படி கூடிய விரைவில் வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : இளம் கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் காலமானார் !