பூடானில் 7 நாட்களுக்கு ஊரடங்கு

பூடான் நாட்டின் திம்பு, பாரோ மற்றும் லாமொய்ஜிங்கா உள்ளிட்ட நகரங்களில் புது வகை கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

பூடானில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, மாவட்டங்களுக்கு இடையேயான இயக்கங்களுக்கு செவ்வாய்க்கிழமை காலையில் இருந்து தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அந்நாட்டின் திம்பு, பாரோ மற்றும் லாமொய்ஜிங்கா உள்ளிட்ட நகரங்களில் புது வகை கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.