397 ஆண்டுகளுக்கு பிறகு வானில் இன்று நடக்கப்போவது என்ன?

397 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியக் குடும்பத்தின் இருபெரும் கோள்கள் ஒரு புள்ளியைப் போல மிக நெருக்கமாய் அமைந்த அபூர்வ நிகழ்வு இன்று நடந்தது.சூரியனைச் சுற்றி வரும் கோள்களில் வியாழன் மற்றும் சனி ஆகிய இரு கோள்கள் 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும்.இதிலும் வியாழன் மற்றும் சனி ஆகிய இரு கோள்களும் ஒரே நேர்கோட்டில் மிக நெருக்கமாகச் சந்திக்கும் நிகழ்வு 397 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நிகழ்ந்தது.

இரு கோள்களும் 397 ஆண்டுகளுக்கு முன்பு 0.08 டிகிரி நேர்கோட்டில் மிக நெருக்கமாகச் சந்தித்தது. அதே சமயம் தற்போது இரு கோள்களும் 0.01 நேர்கோட்டில் மிக நெருக்கமாகச் சந்திப்பதாக வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.சூரிய மண்டலத்தின் ஆறாவது கிரகமான சனி வியாழனுக்கு இடது புறத்தில் தோன்றுகிறது.