விமான பயனிடம் சிக்கிய வெளிநாட்டுப் பணம் !

சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்யவந்த பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டபோது, சென்னையை சோ்ந்த முகமது அசாருதீன் அவருடைய லேப்டாப் பையில் யூரோ, பவுண்ட் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்து அவற்றை அலுவலர்கள் பறிமுதல் செய்தனா்.

இதன் மதிப்பு சுமாா் 7.78 லட்சம் ரூபாய் ஆகும். இதையடுத்து அந்நபரின் பயணத்தை ரத்து செய்து, அவரைக் கைது செய்த அலுவலர்கள், தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.