தமிழ்நாட்டில் நடைபெறும் 5வது மெகா தடுப்பூசி முகாம் !

covid vaccine : சிறுவர்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசி !
covid vaccine : சிறுவர்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசி !

கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் இன்று 5ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.இது வரை நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களில் மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடத்தப்பட உள்ளது. இதில் 30 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டு 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் குலுக்கல் முறையில் தேர்வு செய்து அவர்களுக்கு சைக்கிள், மிக்ஸி, குக்கர் மற்றும் சில்வர் பாத்திரங்களை வழங்குவதாக மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : விரைவில் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் !