சமந்தா தாயாகும் முடிவில் தான் இருந்தார் !

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.இவருக்கும் நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன் இருவருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் உள்ளன.

மேலும் சில நாட்களுக்கு முன்பு சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் பிரிய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.இவர்கள் பிரிவதாக அறிவித்த பிறகு பலதர பட்ட கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன.

சமீபத்தில் சமந்தா ஒரு பதிவில் விவாகரத்து என்பது வலிமிகுந்தது. நான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை போன்ற வதந்திகளை நம்பவேண்டாம் என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.இதற்கு ரகுல் ப்ரீத் மற்றும் மஞ்சுமா போன்ற நடிகைகள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில்,சமந்தா விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டார் சமந்தா என்று பிரபல தயாரிப்பாளர் நீலிமா குணா தெரிவித்துள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் நீலிமா குணா கூறியிருப்பதாவது, என் தந்தை இயக்குநர் குணசேகர், சாகுந்தலம் படத்திற்காக சமந்தாவிடம் சென்றார். அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. நான் குழந்தை பெற திட்டமிட்டிருக்கிறேன். அதனால் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என்று கூறினார் சமந்தா என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : விரைவில் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் !