ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட அமைச்சர்..!

சென்னை அரசு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

சுகாதார பணியாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

நான் கொரோனே தடுப்பூசி செலுத்திக்கொள்வேன் என்றும் ஒரு அமைச்சராக இல்லாமல் மருத்துவராக ஐஎம்ஏ உறுப்பினராக நான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன் என்று கடந்த இரு தினங்களுக்கு முன்பு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.