44 கோடி தடுப்பூசி வாங்க மத்திய அரசால் ஆர்டர் செய்யப்படுகிறது !

இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாம் பரவி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.கரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி மிக அவசியம்.

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மத்திய அரசு இலவச தடுப்பூசிகளை ஜூன் 21ம் தேதி முதல் வழங்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 44 கோடி கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய கரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்கான கொள்முதல் உத்தரவை மத்திய அரசு இன்று பிறப்பித்துள்ளது.

இதன்படி, மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்காக, 25 கோடி கோவிஷீல்டு மற்றும் 19 கோடி கோவாக்சின் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான உத்தரவை, மத்திய அரசு பிறப்பித்துள்ளது.