மக்கள் கவனத்திற்கு..கரோனா தடுப்பூசி திருவிழா !

பிரதமர் மோடியின் பொங்கல் வாழ்த்துக்கள்
பிரதமர் மோடியின் பொங்கல் வாழ்த்துக்கள்

கரோனா தொற்றின் இரண்டாம் அலை வீச தொடங்கிய நிலையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.மக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு கொள்கின்றனர்.

இந்த நிலையில், தேசிய அளவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று தொடங்குகிறது. அதாவது, கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் இன்று முதல் 4 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி தடுப்பூசி திருவிழா தொடங்கியது.

பிரதமர் மோடி மக்களுக்கு ஆற்றியுள்ள உரையில்,நான்கு நாட்களும் அதிகம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் 4 முக்கிய விஷயங்களை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தடுப்பூசி போட உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுங்கள், கொரோனா சிகிச்சையில் உள்ள மக்களுக்கு உதவுங்கள், முக கவசங்கள் அணியுங்கள் மற்றும் மற்றவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.