ஜூனியர் மருத்துவர்கள் 3000 பேர் ராஜினாமா !

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஜூனியர் மருத்துவர்கள், தங்களுக்கோ தங்களின் குடும்பத்தினருக்கோ கொரோனா தொற்று ஏற்பட்டால் இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த திங்கட்கிழமை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் சட்டவிரோதம் என உயர் நீதிமன்றம் நேற்று கண்டித்ததுடன் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் 24 மணி நேரத்திற்குள் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதனால் கடும் அதிருப்தி ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் சுமார் 3,000 ஜூனியர் மருத்துவர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை அந்தந்த கல்லூரிகளின் டீனுக்கு சமர்ப்பித்ததாகவும் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறினார்.