திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்ய தடை

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதித்தது. இதனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று முதல் 3 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

பக்தர்கள் கோவில் வளாகத்திற்குள் செல்ல முடியாதபடி வடக்கு, தெற்கு டோல்கேட் பகுதியிலும் மற்றும் அனுக்கிரக விலாசம் பகுதியிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் மற்றும் கோவில் தனியார் நிறுவன பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் கோவில் வளாகம் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.