கடத்தப்பட்ட 20 டன் கடற்சிப்பிகள் பறிமுதல்

தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு பல லட்சம் மதிப்புள்ள கடற்சிப்பிகள் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து புளியரை சோதனை சாவடியில் வனத்துறையினர் வாகன தணிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது கேரள பதிவெண் கொண்ட லாரியை சோதனையிட்டதில் அதில் 20 டன் கடற்சிப்பிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து லாரி ஓட்டுனர் அஜித் என்பவரிடமும், அவருடன் வந்த வினில் என்பவரிடமும் வனத்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.