5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இரண்டு நாட்களுக்கு தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதியின் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், ஏனைய கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், தமிழகத்திற்கு டிசம்பர் வரை 44.7 சென்டி மீட்டர் மழை கிடைக்க வேண்டும் என்றும், தற்போதுவரை 43.2 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும் புவியரசன் தெரிவித்தார்.