20 கோடி கூடுதல் கோவாக்சின் உற்பத்தி செய்துள்ளது பாரத் பயோடெக்..!

கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பாளரான பாரத் பயோடெக் நிறுவனம், குஜராத்தில் உள்ள தங்களின் துணை நிறுவனம் மூலம் கூடுதலாக 20 கோடி தடுப்பூசிகள் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் ஆண்டுக்கு 20 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஆலை மட்டுமின்றி பெங்களூரு, ஐதராபாத்திலும் கோவாக்சின் உற்பத்தி செய்யப்படுகிறது. நிதி ஆயோக் உறுப்பினரான வி.கே.பால் கடந்த வாரம் அளித்த பேட்டியில், இந்தியாவில் இந்தாண்டு இறுதியில் 200 கோடி தடுப்பூசிகள் தயாராக இருக்கும் என தெரிவித்திருந்தார். தற்போது 20 கூடுதல் கோவாக்சின்கள் மூலம் அந்த இலக்கை எட்டுவது எளிதாகும்.