13 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் -வேலூர் !

வேலூர் வணிகர் சங்க பேரமைப்பு, ஜெயின் சங்கம் சார்பில் 18 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கான தடுப்பூசி முகாமை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்துப் பேசும் போது, வேலூர் மாவட்டத்தில் கரோனாதடுப்பூசிகள் ஏற்கெனவே போடப் பட்டு வருகிறது.

இந்நிலையில், 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் 6 லட்சத்து 68 ஆயிரத்து 805 பேர் உள்ளனர். அவர்களுக்காக கடந்த 24-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 7 இடங்களிலும் வணிகர் சங்கம் இந்திய செஞ்சிலுவை சங்கம் ரோட்டரிசங்கம் ஜெயின் சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் சார்பில் 6 இடங்கள் என மொத்தம் 13 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

எனவே பொதுமக்கள் தங்களையும் தங்களது குடும்பத்தார் மற்றும் உறவினர்களை பாதுகாத்துக் கொள்ள தயக்கம் காட்டாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.