பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலை!

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்

மொத்த பணியிடங்கள்: 814

கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தின் மூலம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 01/02/2021 ன் படி தேர்வர்கள் இளநிலை பட்டப்படிப்பு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இளநிலை அல்லது அதற்கு மேலான கல்வி தகுதிகள் பெற்றிருந்தால் அவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க இயலாது. மேலும் விண்ணப்பிக்கும் தேர்வர்கள் அந்தந்த மாநில மொழிகளில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இணையம் மூலம் 15-03-2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.