தமிழ்நாட்டில் 7 லட்சத்தை தாண்டியது கரோனா பாதிப்பு…!

தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 28) புதிதாக 1,430 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதன் மூலம், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 79 ஆயிரத்து 46ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,430 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 79 ஆயிரத்து 46ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 393 பேருக்கு தொற்று உறுதி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், இன்று ஒரே நாளில் 1,450 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13 பேர் இன்று உயிரிழந்தனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 65,579 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.