டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் 2000 மினி கிளினிக் – முதல்வர்

மருத்துவ வல்லுனர்கள் குழு கொடுக்கும் ஆலோசனைகள் படி முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுத்ததால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து இன்று மதியம் 2 மணிக்கு ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவும் முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார்.