Today Rasi Palan: இன்றைய நாள் எப்படி (21.12.2022)

இன்றைய நாள் (Today Rasi Palan) டிசம்பர் 21, 2022 புதன்கிழமை. சுபகிருது வடம் மார்கழி மாதம் 06ம் தேதி.
நல்ல நேரம்
காலை: 9.00 முதல் 10.00 மணி வரை
மதியம்: 1.45 முதல் 2.45 மணி வரை
மாலை: 4.45 முதல் 5.45 மணி வரை
இரவு : 6.30 முதல் 7.30 மணி வரை

மேஷம்: மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. உறவுகளால் சிறு பிரச்சனை ஏற்பட்டு நீங்கும்.

ரிஷபம்: வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் தேவை. எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மிதுனம்: உற்சாகமான நாள், காரியங்களில் அனுகூலமாகும். பெரியவர்களின் ஆலோசனை பயன் தரும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பணவரவுக்கும் வாய்ப்புண்டு.

கடகம்: உறவுகளுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும் என்றாலும் மகிழ்ச்சியே உண்டாகும்.

சிம்மம்: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனாலும் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

கன்னி: உற்சாகத்துடன் செயல்படுவீர்கள், எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவுகளின் தேவையை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படும்.

துலாம்: புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. பேச்சில் பொறுமை அவசியம். சிலருக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது.

விருச்சிகம்: உறவினர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. பொறுப்புகளில் காரணமாக அலைச்சல் ஏற்படும். இறைவழிபாடு தேவை.

தனுசு: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பணப்புழக்கம் இருந்தாலும் திடீர் செலவுகளும் கூடும். எதிர்பார்த்த காரியம் இழுபறியாகி முடியும்.

மகரம்: பல வகைகளிலும் நன்மைகள் நடைபெறும் நாள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்கக் காரியம் அனுகூலமாக முடியும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும்.

கும்பம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்து ஏமாந்த பணம் இன்று கைக்கு வரும். வீட்டிலும் வெளியிலும் பேசும்போது பேச்சில் கவனம் தேவை. வார்த்தைகளால் வம்பு வரலாம்.

மீனம்: முற்பகலில் சோர்வும் பிற்பகலில் உற்சாகமும் உண்டாகும் நாள். மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் சற்று சோர்வும் அதிகமாகவே இருக்கும்.