Rs 2 Lakh Crore: கை கடிகாரத்தால் ரூ.2 லட்சம் கோடியை வெளியே கொண்டு வருவேன்: தி.மு.க.வை அலறவிடும் அண்ணாமலை

திருப்பூர்: பா.ஜ.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா (Rs 2 Lakh Crore) மற்றும மாற்று கட்சியினர் பா.ஜ.வில் இணையும் விழா திருப்பூர் கோவில்வழி பகுதியில் நடந்தது.

இந்த நிகழ்வில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதன்படி அவர் பேசும்போது, கடந்த 13 ஆண்டுகள் சம்பாதித்த அனைத்து கணக்குகளையும் அளிக்கிறேன். நான் ரூ.18 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையில் சம்பளம் வந்துள்ளது. அதில் கிரெடிட் கார்டு பில் கட்டியுள்ளேன். ஊழலை எதிர்க்கும் ஒரு கட்சி என்றால் பா.ஜ.க. மட்டுமே. கடந்த 75 ஆண்டுகளில் எந்த ஒரு அரசியல் தலைவரும் செய்யாதவையை வருகின்ற ஏப்ரல் மாதம் செய்ய உள்ளேன் என்றார்.

மேலும், ரபேல் கை கடிகாரத்திற்கான ரசீது மட்டுமின்றி ஐ.பி.எஸ். அதிகாரியாக வேலை பார்த்தபோது பெற்ற ஊதியம் அதற்கான செலவுகள், கிரெடிட் கார்டு பில் உட்பட தன்னுடைய சொத்து விவரங்கள் அனைத்தையும் வெளியிட உள்ளேன்.

மேலும், அவர் பேசும்போது சொத்துப்பட்டியல் மட்டுமின்றி தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியை சேர்ந்தவர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பினாமி பெயரில் வாங்கிய சொத்துக்களின் விவரங்களை தனியாக ஒரு இணையதளம் தொடங்கி அதில் வெளியிட உள்ளேன். இதுவரையில் தி.மு.க.வை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் மொத்த சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி அளவிற்கு இருக்கிறது. இவை மேலும் அதிகரிக்கும். தமிழகத்தில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

முந்தைய செய்தியை பார்க்க:Atlee priya baby shower function: அட்லியின் மனைவி வளைகாப்பு விழாவில் கலந்துகொண்ட விஜய்

முந்தைய செய்தியை பார்க்க:Allowing Quarries Near Reserve Forests: காப்புக்காடுகளுக்கு அருகில் குவாரிகள் அமைக்க அனுமதிப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்