Today Rasi Palan: இன்றைய ராசி பலன் (18.12.2022)

சென்னை: சுபகிருது ஆண்டு மார்கழி மாதம் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 18.12.2022. மேஷம் முதல் மீனம் வரையுள்ள (Today Rasi Palan) 12 ராசிக்காரர்களின் பலன்களை பார்ப்போம்.

மேஷம்: தொழில் ரீதியான விஷயங்களில் முன்னேற்றம் அடைவீர்கள். கணவன், மனைவி இடையே சிறு கசப்புகள் ஏற்படலாம். விட்டுக்கொடுத்து போவது நல்லது. கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு பணவரவு கிட்டும். முயற்சிகள் உங்களுக்கு சாதகமான பலனைத் தரும்.

ரிஷபம்: பெண்கள் ஆசைப்பட்டது கிடைக்கலாம். அரசியல் தலைவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். படிப்பில் உள்ள தடைகள் நீங்கி மாணவர்கள் மன நிம்மதி அடையலாம். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாளுவீர்கள். வராமல் இருந்த பணம் இன்று கைக்கு வரும்.

மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடன் வேலை செய்பவரிடம் விவாதம் நடத்தாதீர்கள். தொழிலில் சற்று மந்தம் ஏற்படலாம் ஆனால் வருமானத்தில் குறைவு இருக்காது. மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.

கடகம்: வியாபாரத்தில் முன்னேற்றம் அடைய மிகக் கடுமையாக உழைப்பது நல்லது. வெளியில் சொல்ல முடியாத சில பிரச்சினைகள் கணவன், மனைவிக்கு இடையே நிலவும். எதிர்பார்த்தபடி வேலை நடைபெறாமல் மனம் சங்கடப்படும். விருப்பம் இல்லாத இடத்திற்கு மாற்றம் வரலாம்.

சிம்மம்: அரசு மூலம் நடைபெற வேண்டிய காரியங்கம் மிகச்சிறப்பாக ஈடேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனை தீரும். தங்கத்தை வாங்கி பெண்கள் மகிழ்ச்சியடைவார்கள். அலைச்சலால் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும். மன உறுதியால் வெற்றி அடைவீர்கள்.

கன்னி: பயணங்கள் மூலமாக நல்ல பலனை அடைவீர்கள். சக ஊழியர்களிடம் சாமர்த்தியமாகப் பேசி வேலை வாங்குவீர்கள். கணினித் துறையில் இருப்பவர்கள் வளர்ச்சி காண்பார்கள். மற்றவர்களுக்காக ஆடம்பரச் செலவு செய்வீர்கள். அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் இருந்தால் சிறப்பு.

துலாம்: பணவரவு அதிகரித்து மனக்கவலை மறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு லாபம் கிட்டும். புதிய வேலைகள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். திட்டமிட்டுச் செயல்பட்டாலும் சில காரியங்கம் தடைபடலாம். பணியாளர்கள் முன்னேற்றமான பலனைப் பெறுவார்கள்.

விருச்சிகம்: சிலர் வீட்டை விட்டு வெளியேறும் சூழல் உண்டாகலாம். கூட்டுத்தொழில் செய்யும்போது மிக கவனம் தேவை. தொழிலில் மந்தம் ஏற்படும். வியாபாரம் ஏற்றம் இறக்கமாக நடைபெற்றாலும் லாபம் கிட்டும். பெண்கள் இன்று பண விஷயங்களில் கவனமாக இருங்கள். மாணவர்கள் பாடங்களை மிகவும் கவனமுடன் படிக்க வேண்டும். யாருக்கும் எவ்வித உத்தரவாதமும் அளிக்கக்கூடாது.

தனுசு: அரசு அதிகாரிகளிடம் கவனமாகப் பழக வேண்டும். குடும்பச் செலவுகள் குறையலாம். வேலையிடத்தில் மன நிம்மதி கிடைக்கும். தொழிலில் நல்லம் முன்னேற்றம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் அக்கறை தேவை. வெளியூர் பயணங்களால் சோர்வு உண்டாகும்.

மகரம்: புண்ணிய காரியங்களில் ஈடுபாடும் உயரும். வாழ்க்கையில் எதிர்பாராத சில திருப்பங்களைச் சந்திப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. அரசுப் பணியாளர்கள் வேலையில் அக்கறையாக செயல்பட வேண்டும். காவலர்ர்கள் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். மனதில் தோன்றும் வீண் ஆசைகளைக் கட்டுப்படுத்துவது நல்லது.

கும்பம்: சில அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பிள்ளைகளால் எதிர்பாராத செலவு உண்டாகும். யாரையும் நேருக்கு நேராக எதிர்த்து பேச வேண்டாம். அரசு அலுவலகங்களில் பணி அதிகரிக்கும். பொருளாதாரம் திருப்தியாக இருக்கும். சில இடத்தில் உதவி கிடைக்கும்.

மீனம்: கணவன், மனைவி இடையே நிலவி வந்த கசப்புகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். அரசியல் பிரபலங்களுக்கு சற்று டென்ஷன் அதிகரிக்கலாம். வியாபாரத்தில் ஏற்பட்ட இடைஞ்சல்கள் மறையும். பண வரவு அதிகரிக்கும். மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். தனியார் துறையில் புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும்.

முந்தைய செய்தியை பார்க்க:Congress Win Parliment Election: பா.ஜ.க.வை நாங்கள் வீழ்த்துவோம்: ராகுல் காந்தி

முந்தைய செய்தியை பார்க்க:This isnt Nehrus India: இது நேருவின் இந்தியா கிடையாது: ராகுல் காந்தியின் கருத்துக்கு பா.ஜ.க. பதிலடி