By The Mysterious Object That Fell In The Governor’s House: ஆளுநர் மாளிகையில் விழுந்த மர்ம பொருளால் அதிர்ச்சி

சென்னை: சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் (By The Mysterious Object That Fell In The Governor’s House) முக்கிய விருந்தினர்கள் தங்கும் இல்லம் உள்ளது. இதனால் அப்பகுதி எப்போதும் பாதுகாவலர்கள் கண்காணிப்பில் இருக்கும்.

இந்நிலையில், நேற்று (டிசம்பர் 17) இந்த விருந்தினர்கள் இல்லத்தின் அருகே மர்மப்பொருள் ஒன்று எரிந்த நிலையில் இருந்தது. அங்கு ரோந்து பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது ஒரு வேலை சதி வேலையாக இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த அதிகாரிகள், உடனடியாக சென்னை மாநகர போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனை தொடர்ந்து அங்கு மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் ஆளுநர் மாளிகைக்கு போலீசார் விரைந்தனர். அப்போது அங்கு கிடந்த மர்மப்பொருளை ஆய்வு மேற்கொண்டனர். மேலும், டிரோன் போல இருந்ததால் மிகத்தீவிரமாக ஆய்வுகளை நடத்தினர்.

ஆய்வுக்கு பின்னர் அது வானிலை ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் பலூன் என்பது தெரியவந்தது. ஒவ்வொரு முறையும் வானிலை ஆய்வுக்காக காலை மற்றும் மாலை நேரங்களில் பறக்கவிடப்படும் பலூன் எனவும், அது செயல் இழந்து விழுந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடனும், வெடிகுண்டு நிபுணர்களுடனும் தனிப்படை போலீசார் ஆளுநர் மாளிகை முழுவதும் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளுநர் மாளிகையில் மர்மப் பொருள் இருப்பதாக வந்த தகவலால் அப்பகுதியில் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தியை பார்க்க:Today Rasi Palan: இன்றைய ராசி பலன் (18.12.2022)

முந்தைய செய்தியை பார்க்க:New condition for shop Owners: கடை உரிமையாளர்களுக்கு புதிய நிபந்தனை விதித்த சென்னை மாநகராட்சி