Wild elephant attack: சிக்கமகளூர் மல்லாந்தூர் பகுதியைச் சேர்ந்த சுப்ரமண்யா 35 வயது இவர் கொலகாமே என்னும் பகுதியில் காப்பி தோட்டத்தில் கணக்காளராக வேலை செய்து வருகிறார் இன்று காலை 7 மணிக்கு காப்பி தோட்ட வேலைக்கு சென்று கொண்டிருந்த பொழுது கிராமம் அருகே மோட்டார் சைக்கிள் சென்ற பொழுது திடீரென குறுக்கே ஒரு காட்டு யானை வந்தது அப்பொழுது அவர் யானை மீது பைக் மோதி தூக்கி வீசப்பட்டார் அதே இடத்திலேயே அவர் கீழே விழுந்த உடன் யானை அவரது வயிற்றுப் பகுதியில் கலால் மிதித்தது அவர் கத்தம் போட்டதை அடுத்து அங்கிருந்த யானை வனப் பகுதிக்குள் சென்று விட்டது பலத்த காயமடைந்த அவரை சிக்கமகளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு வனத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சென்று பார்வையிட்டனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை மங்களூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது நிரந்தரமாக யானை அட்டகாசம் செய்து வரும் நிலையில் இன்று வேலைக்குச் சென்ற காபி தோட்ட கணக்காளர் மீது யானை மிதித்தது பெரும் அந்தப் பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது மல்லந்தூர் போலீசார் விசாரணை நடத்தினர்



