Trichy Cauvery Bridge closed: திருச்சி காவிரி பாலம் இன்று முதல் மூடல்

திருச்சி: Trichy Cauvery Bridge closure for 5 months. திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் மூடப்பட்டுள்ளது.

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்கோவிலுக்கு செல்லும் வழியில் அமைந்து காவிரி பாலத்தில் பராமரிப்புப் பணிகள் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த பராமரிப்பு பணிகளை முடிக்க சுமார் 5 மாங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

இதனால், காவிரிப் பாலத்தின் வழியாக செல்லும் வாகனங்களின் போக்குவரத்து இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வானகங்கள் மாற்றுப் பாதையில் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல் அண்ணாசிலை வழியாக ஸ்ரீரங்கம் செல்ல காவிரிப் பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஓயாமரி வழியாக செல்ல வேண்டும். பின்னர் இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை பழைய பாலத்தின் வழியாகச் செல்லவேண்டும். அதன்பின் இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி திருவானைக்கோவில் அடைந்து ஸ்ரீரங்கம் செல்லலாம்.

மேலும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திலிருந்து இடதுபுறம் உள்ள திருவானைக்கோவில் செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலத்தின் வழியாக திருவானைக்கோவில் வந்தடைந்து வலதுபுறம் திரும்பி, ட்ரங்க் சாலை வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி இடதுபுறம் திரும்பி, கும்பகோணத்தான் சாலை வழியாக வந்து திரும்பி சென்னை பைபாஸ் சாலை பழைய பாலத்தின் வழியாக வந்து வலதுபுறம் திரும்பி, ஓயாமரி வழியாக அண்ணாசிலை வந்தடைந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லலாம்.

திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வாகனங்கள் மாநகரத்தின் வழியை தவிர்த்து, புறவழிச்சாலை வழியாக சஞ்சீவி நகர் மார்க்கமாக காவிரி புதுப்பாலம் வழியாக நெ.1. டோல்கேட் அடைந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்னை செல்லலாம். அதேபோல சென்னையிலிருந்து திருச்சி வரும் வாகனங்கள் நெ.1.டோல்கேட் அடைந்து காவிரி புதுப்பாலம் வழியாக வந்து புறவழிச்சாலை மார்க்கமாக திருச்சி அடையலாம் என திருச்சி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.