Traffic diversions: மெட்ரோ ரயில் 2ம் கட்டப் பணிகள்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: Traffic diversions on trial basis for one week. சென்னை பசுமைவழிச் சாலை- டி.ஜி.எஸ் தினகரன் சாலை சந்திப்பில் மெட்ரோ இரயில் இரண்டாவது கட்ட பணிகள் நடைபெறவுள்ளதால் 24.10.2022 முதல் ஒருவார காலத்திற்கு சோதனை அடிப்படையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆர்.கே.மடசாலை x மந்தைவெளி சந்திப்பிலிருந்து பிராடிஸ் கேஸில் சாலை வரை ஒரு வழிபாதையாக மாற்றம் செய்யப்படும். மந்தைவெளியிலிருந்து வாகனங்கள் ஆர் கே மடச் சாலையை நோக்கி அனுமதிக்கப்படமாட்டாது.

பிராடிஸ் கேஸ்லே சாலையில் இருந்து ஆர்.கே.மடச்சாலை நோக்கி செல்லலாம். அடையாறிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் கிரீன்வேஸ் சாலை சந்திப்பில் வலதுபுறமாக திருப்பிவிடப்பட்டு டி.ஜி.எஸ் தினகரன் சாலை வழியாக திருப்பிவிடப்படும்.

மந்தைவெளி மற்றும் மயிலாப்பூர் செல்லும் வாகனங்கள் பிராடிஸ் கேஸில் சாலை வழியாக ஆர்.கே.மடச் சாலை வழியாக செல்லலாம். சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்கள் நேராக செல்லலாம். மயிலாப்பூரில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் மந்தைவெளி சந்திப்பில் இடதுபுறமாக திருப்பிவிடப்பட்டு சவுத் கெனால் பேங்க் சாலை வழியாக சென்று சவுத் கெனால் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி டி.ஜி.எஸ்.தினகரன் சாலை அடைந்து அவர்களது செல்ல வேண்டிய இலக்கை அடையலாம்.

மேற்படி போக்குவரத்து மாற்றங்கள் தற்காலிகமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளதால், ஓட்டுநர்களும் மற்றும் பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.