Gang-raped : சாப்ட்வேர் இன்ஜினியர் அடித்து துன்புறுத்தப்பட்டு வெறிச்சோடிய பகுதிக்கு இழுத்துச் சென்று கூட்டு பலாத்காரம்

Software engineer : அவர் அளித்த வாக்குமூலத்தின்படி, அக்டோபர் 20 ஆம் தேதி தனது தோழியுடன் வெளியூர் சென்றிருந்தபோது இந்தச் செயல் நடந்ததாகக் கூறப்படுகிறது.

ஜார்கண்ட்: Gang-raped : ஜார்கண்ட் மாநிலம் சாய்பாசாவில் (At Chaibasa, Jharkhand) மனிதாபிமானமற்ற சம்பவத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 26 வயது மென்பொருள் பொறியாளர் தாக்கப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தொழில்நுட்ப வல்லுனரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். அவர் அளித்த வாக்குமூலத்தின்படி, அக்டோபர் 20ஆம் தேதி தனது தோழியுடன் வெளியே சென்றிருந்தபோது இந்தச் செயல் நடந்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின்படி, அந்த பெண் தனது தோழியுடன் சாலையில் பேசிக் கொண்டிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் எட்டு முதல் பத்து பேர் (Eight to ten people) கும்பலாக வந்து இருவரையும் அடித்தனர். பின்னர், மர்மநபர்கள் அந்த பெண்ணை மறைவான‌ இடத்திற்கு இழுத்துச் சென்று ஒவ்வொருவராக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்த போலீசார், சிறப்பு புலனாய்வு குழுவை அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சாய்பாசா மஃபாசில் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட தெக்ரஹது பகுதியின் விமான நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் ஜிக்பானி காவல் நிலையத்திற்கு உட்பட்ட (Under Zigbani Police Station) கிராமத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் என்று கூறப்படுகிறது. மாலை ஆறு மணியளவில், அவர் தனது தோழியுடன் பைக்கில் டெக்ரடாஹு ஏர்ஸ்ட்ரிப் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​எட்டு முதல் பத்து இளைஞர்கள் அவளைத் தாக்கி, அவளுடைய தோழியை மிரட்டி, அருகில் உள்ள வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் சென்று கும்பல் பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்கிடமான நடவடிக்கையின் அடிப்படையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்களை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். போலீஸ் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அடையாளம் தெரியாத பத்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் அசுதோஷ் சேகர் (Superintendent of Police Ashutosh Shekhar) தெரிவித்தார்.