Tirupati couple Suicide : திருப்பதி லாட்ஜில் காதலர்கள் தற்கொலை

நான்கு மாதங்களுக்கு முன், அனுஷா விருப்பமில்லாமல், குடும்பத்தினர் அவருக்கு வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இதனால் அனுஷா தனது காதலர் கிருஷ்ணா ராவுடன் லாட்ஜுக்கு வந்தார்.

திருப்பதி: (Tirupati couple Suicide) காதலர்கள் இருவர் லாட்ஜில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் அருகே உள்ள தனியார் லாட்ஜில் நடந்துள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டம் கொவ்வூரை சேர்ந்த அனுஷா மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்த கிருஷ்ணராவ் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் தம்பதி என்று கூறி லாட்ஜில் அறை புக் செய்ததாக தெரிகிறது. ஆனால் மறுநாள் காலை கதவு திறக்கப்படவில்லை. இந்நிலையில், பலமுறை கதவை தட்டியும் லாட்ஜ் ஊழியர்கள் கதவை திறக்கவில்லை. இந்நிலையில், சந்தேகமடைந்த ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து பார்த்தபோது இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இருவரும் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை (Suicide by hanging on electric fan) செய்து கொண்டனர்.

அனுஷாவும் கிருஷ்ணா ராவும் காதலித்து வந்தனர். ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு அனுஷாவின் குடும்பத்தினர் சம்மதிக்க‌வில்லை. இதனால் அனுஷாவுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு நபருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் அனுஷா காதலரை மறக்கவில்லை. இந்த நிலையில் அனுஷா தனது காதலர் கிருஷ்ணா ராவுடன் லாட்ஜுக்கு வந்தார் (Anusha arrives at the lodge with her boyfriend Krishna Rao). திருமணத்திற்கு குடும்பத்தினர் ஒப்புக் கொள்ளததால் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அனுஷாவின் பெற்றோர் அண்மையில் கொவ்வூர் காவல் நிலையத்தில் தங்கள் மகள் காணாமல் போனது குறித்து புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது அனுஷா இறந்ததை திருப்பதி போலீசார் உறுதி செய்துள்ளனர். இருவரது உடல்களுக்கும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட உறவினர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்ற‌னர்.