Miracle of sprouting a cut banana tree: வெட்டிய வாழை மரத்தில் குலை தள்ளிய அதிசயம்

விழுப்புரம்: The miracle of sprouting a cut banana tree. விழுப்புரம் அருகே வெட்டிய வாழை மரத்தில் குலை தள்ளிய அதிசயம் நிகழ்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது பல்லரிப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தின் விவசாயி ஒருவரது நிலத்தில் வெட்டிய வாழை மரத்தில் இருந்து குலை வந்துள்ளது. விவசாயி கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் வாழைமரத்தின் அடிப்பகுதியை வெட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வெட்டிய அந்த வாழை மரத்தில் ஒரு வாரத்திலேயே பூத்து, பின்னர் குலை தள்ளியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிசய நிகழ்வு வைரலாக பரவி, வாழைக் குலையை கிராம மக்கள் ஏராளமானோர் ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற வண்ணம் உள்ளனர்.

கடந்த ஆண்டு பேராவூரணி அருகே உள்ள வீரையன் கோட்டையில் வாழை மரம் ஒன்று மிக நீண்ட குலையை தள்ளிய அதிசயம் நிகழ்ந்துள்ளது. அதேபோல், திசையன்விளை அருகே முதுமொத்தன்மொழியை சேர்ந்தவர் சிவராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சக்கை ரக வாழைகளை பயிரிட்டு உள்ளார். ஒரு வாழைக்கன்றில் ஒரு இலை கூட வருவதற்கள் குலை தள்ளிய அதிசயமும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.