Sri Lankan cricketer arrested: ஆஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் வீரர் கைது

சிட்னி: Sri Lankan cricketer arrested in Australia. ஆஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகா, பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா, தங்களது அணிக்காக இதுவரை 47 ஒருநாள் போட்டிகளிலும், 46 டி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்த இரு வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி ஆல் ரவுண்டரான தனுஷ்கா குணதிலகா, இலங்கை அணியின் பல்வேறு வெற்றிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியதன் காரணமாக, டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்க தேர்வானார்.

இதனைததொடர்ந்து ஆஸ்திரேலியா வந்த அவர், இலங்கை அணியுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். டி20 உலகக் கோப்பையின் முதல் சுற்று ஆட்டத்தில் நமீபியாவுக்கு எதிராக விளையாடி டக் அவுட் ஆனார். சூப்பர் 12 கட்டத்திற்கு தகுதி பெற்றதும் காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறினார். இவருக்கு பதிலாக இலங்கை அணியில் பண்டாரா சேர்க்கப்பட்டார். தனுஷ்க குணதிலகா காயம் அடைந்தாலும் இலங்கைக்கு திரும்பாமல் அணியுடனேயே இருந்து வந்தார். இலங்கை அணிக்கு உற்சாகமளிக்கும் வகையில் அணியுடன் தொடர்ந்து பயணித்தும், வீரர்களுக்கு உதவியாகவும் இருந்தார்.

இந்நிலையில், கடந்த 2ம் தேதி ரோஸ் பே நகரில் உள்ள ஒரு ஓட்டலில் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது அந்த பெண்ணை குணதிலகா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக, அனுமதி இன்றி தன்னுடன் பாலியல் உறவு வைத்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் சிட்னி போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக சிட்னி போலீசார் குணதிலகாவை நேற்று கைது செய்துள்ளனர்.