TN CM M.K.Stalin : இன்னும் குறையவில்லை கரோனா தாக்கம் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : Corona has not decreased : TN CM M.K.Stalin : கரோனா தாக்கம் இன்னும் குறையவில்லை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது: கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா மெகா தடுப்பூசி மட்டும் 17, 55,364 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனா தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதனை உணர்ந்து அனைவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஒரு லட்சம் இடங்களில் 31-வது சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்ற‌து. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் இரண்டாவது தவணை செலுத்திக் கொள்ளாதவர்கள். 2 தவணை செலுத்திக் கொண்டு 6 மாதங்கள் கடந்தும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதாவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாமில் பணியாற்றிய‌ சுகாதாரப்பணியாளர்களுக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. திங்கள்கிழமை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தற்போது 12-வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டு 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.