Woman burned: திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை உயிரோடு எரித்த காதலன்: திருப்பூரில் அதிர்ச்சி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பெத்தாம்பாளையம் (Woman burned) சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று (ஜனவரி 3) மாலை தீக்காயங்களுடன் 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் அலறியவாறு தன் மீது பெட்ரோல் ஊற்றி ஒருவர் தீ வைத்து விட்டதாகவும், காப்பாற்றுங்கள் என்ற சத்தத்துடன் சாலைக்கு ஓடி வந்தார்.

இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கு இடையில் அப்பெண்ணுக்கு தீ வைத்து விட்டு டூ வீலரில் தப்பி செல்ல முயன்றபோது அந்த வாலிபரும் கீழே விழுந்து காயம் அடைந்தார்.
அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மருத்துவமனையில பெண்ணுக்கு முதலுதவி சிசிச்சை அளிக்கப்பட்டுது. இது குறித்து போலீசார் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் வடமாநிலத்தைச் சேர்ந்த அப்பெண்ணின் பெயர் பூஜா 19, அவர் பல்லடம் ராயர்பாளையம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில்த ங்கி அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வருவதாக கூறினார். மேலும், ராயர்பாளையத்தை சேர்ந்த குணசேகரன் 22, என்பவருடன் காதல் ஏற்பட்டது.

இந்நிலையில், பூஜா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி லோகேசை வற்புறுத்தி வந்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த லோகேஷ் தனது டூ வீலரில் இருந்த பெட்ரோலை எடுத்து பூஜா மீது ஊற்றி தீ வைத்துள்ளார் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.