Terrible collision of consecutive vehicles: அடுத்தடுத்து வாகனங்கள் பயங்கர மோதல்; 5 பேர் உயிரிழப்பு

கடலூர்: 5 people lost their lives in a terrible collision between vehicles. கடலூர் அருகே வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் பெரிய செல்லூர் பகுதியில் உள்ள சாலையோரமாக கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளனாது.

இதனைத்தொடர்ந்து பின்னால் வந்து கொண்டிருந்த 4 வாகனங்களும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின. இந்த பயங்கர விபத்தில் 2 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கார் விபத்தில் இறந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த விஜயராகவன், அவரது மனைவி வத்சலா, தாயார் வசந்த லட்சுமி, மகன்கள் விஷ்ணு, அதீர்த் ஆகியோர் என்பது தெரிய வந்துள்ளது.

இவர்கள் அனைவரும் மதுரை மாவட்டம் விளாங்குடி. கணவன் மனைவி இருவரும் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார்கள். கேரளா கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் காஞ்சிபுரம் மாவட்டம் நங்கநல்லூர் செல்லும்போது விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.