Bengaluru Student Murder: பெங்களூருவில் பொறியியல் மாணவியை ஆத்திரம் தீர கத்தியால் குத்திக்கொன்ற நண்பர்

பெங்களூரு: பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள தனியார் (Bengaluru Student Murder) பல்கலைக்கழகத்தில் லயா ஸ்மிதா 19 என்ற மாணவி பி.டெக் படித்து வந்தார். அவரது ஆண் நண்பரான பவன் கல்யாண் மற்றொரு கல்லூரியில் படித்து வருகிறார். இரண்டு பேரும் கோலாம் மாவட்டம், முல்பாகல் தாலுகாவிற்குட்பட்ட ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

இந்நிலையில், பவன் கல்யான் திடீரென்று மாணவி படித்துக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகத்தில் நுழைந்து ஸ்மிதாவை பலமுறை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் தானும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் தன்னையும் கத்தியால் குத்தியுள்ளார். இரண்டு பேரும் ரத்த வெள்ளத்தில் இருந்ததை சக மாணவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக கல்லூரி நிர்வாகத்திற்கும், பாதுகாப்பு ஊழியர்களுக்கும் தகவல் கொடுத்தனர். இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் ஸ்மிதா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். மேலும் காயமடைந்த பவன் கல்யாண் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

எதற்காக மாணவியை குத்திக்கொன்றார் என்ற காரணம் போலீசார் இன்னும் கண்டறியவில்லை. இருவருக்கும் காதல் பிரச்சனையா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையை என்ற கோணத்திலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரியில் மாணவி ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.