சென்னை: M. K. Stalin has recovered from Corona : கரோனா பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிலிருந்து குணமடைந்துள்ளதாக, அவர் சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு ஆழ்வார் பேட்டையில் உள்ள காவிரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிகிச்சைப் தொடர்ந்து சிகிசைப் பெற்று வந்தார்.
மு.க.ஸ்டாலின் தற்போது கரோனாவிலிருந்து முழு குணமடைந்துள்ளதாகவும் (recovered from Corona), அவர் திங்கள்கிழமை வீடு திரும்ப உள்ளார் என்று அம்மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டிற்கு திரும்பும் அவர் , அடுத்த ஒரு வாரத்திற்கு வீட்டில் இருந்தப்படியே ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு (M.K. Stalin) கடந்த 12-ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் சுட்டுரையில், உடல் சோர்வுற்றிருந்ததால் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டதில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். எனவே அனைவரும் முககவசம் அணிவதோடு, தடுப்பூசி (Vaccination) செலுத்திக் கொண்டு பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என்று சுட்டுரையில் பதிவிட்டிருந்தார்.
தமிழகத்தில் தற்போது கரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அனைவரும் முககவசம் அணிந்து (Wearing a mask), கரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக தேவையான பாதுகாப்பையும், தடுப்பூசி செலுத்திக் கொண்டு, அரசு அறிவுறுத்தியுள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.