Student fell college floor: விழுப்புரம் அருகே கல்லூரி மாடியிலிருந்து மாணவி விழுந்ததால் பரபரப்பு

விழுப்புரம்: A student fell from a college floor near Villupuram causing excitement: விக்கிரவாண்டி அருகே கல்லூரி மாணவி முதல் மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மணி நகரை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகள் ரம்யா,வயது 18. இவர் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பார்மஸி கல்லுாரியில் (Private Pharmacy College) பி.பார்ம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ஏற்கெனவே இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததால், இரு முறை மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை கல்லுாரிக்கு வந்த அவர், முதல்மாடியில் தனது சக தோழிகளுடன் பால்கனியில் நின்று பேசிக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி மேலிருந்து கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து, உடனடியாக அங்கிருந்த கல்லுாரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் (Mundiambakkam Government Hospital) அனுமதித்தனர். அங்கு மாணவி சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர், டிஎஸ்பிகள் அபிஷேக் குப்தா, பார்த்திபன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவி மாடியிலிருந்து கீழே விழுந்த செய்தி விக்கிரவாண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தற்கொலை முயற்சி காதல் விவகாரம் என ரகசியம் வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்டு வருவதால், போலீசார் அந்த கோணத்திலும் விசாரணையை நடத்த உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.